என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஜராகவேண்டும் -ஆர்யன் கானுக்கு கடும் நிபந்தனைகள்
Byமாலை மலர்29 Oct 2021 10:35 AM GMT (Updated: 29 Oct 2021 1:13 PM GMT)
போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஆர்யன் கான் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மும்பை:
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு மும்பை ஐகோர்ட் நேற்று ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீன் உத்தரவில், ஆர்யன் கான் ரூ.1 லட்சம் மதிப்பிலான பத்திரம், அதே தொகைக்கு இணையாக ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பிணை செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆர்யன் கான் இதுபோன்ற செயல்களில் (போதைப்பொருள் பயன்படுத்துதல்) ஈடுபடக்கூடாது, இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கக்கூடாது, உடனடியாக சிறப்பு நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குள் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மும்பை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் ஜாமீன் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X