search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.
    X
    கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

    உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 48-ஆக உயர்வு

    உத்தரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள குமான் பகுதியில்தான் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டுமே 42 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
    டேராடூன்:

    கேரளாவை போல உத்தரகாண்ட் மாநிலத்திலும் பலத்த மழையினால் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    கடந்த 5 நாட்களாக இந்த மாநிலத்தில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக அதிக மழை கொட்டியது. அங்குள்ள அல்மோரா பகுதியில் ஒரே நேரத்தில் 21 செ.மீட்டர் மழை பெய்தது.

    இதேபோல மற்ற இடங்களிலும் அதிகளவில் மழை பெய்தது. உத்தரகாண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளது. மலைபிரதேச பகுதி என்பதால் பல இடங்களில் மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டது.

    வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி ஏராளமானோர் பலியானார்கள். இதுவரை 48 பேர் உயிரிழந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால் அந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மீட்புகுழுவினர் செல்ல முடியவில்லை. உள்ளூர் மக்களே எந்த வசதியும் இல்லாத நிலையில் மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

    நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் இருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலர் உயிரிழந்து இருக்கிறார்கள். 10-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களும் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    அங்குள்ள கோசி ஆற்றில் அபாயகட்டத்தை தாண்டி வெள்ளம் செல்கிறது. பல இடங்களில் கோசி ஆற்றின் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் ஜிம் கார்பட் தேசிய பூங்கா முற்றிலும் மூழ்கி இருக்கிறது.

    ராம்நகரில் உள்ள லெமன் டிரீ ஸ்டார் ஓட்டலை ஆற்று வெள்ளம் முழுமையாக சூழ்ந்து கொண்டது. அங்கு 100 பேர் வரை சிக்கி இருந்தனர். அவர்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.

    மீட்பு பணிகளுக்காக ஏற்கனவே மாநில அரசு சார்பில் மீட்புபடைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் மத்திய அரசின் தேசிய மீட்பு படையின் 15 அணியினர் சென்றுள்ளனர். ராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் உள்ளூர் மீட்பு படையினருடன் இணைந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 300 பேரை தேசிய மீட்பு படை மீட்டுள்ளது.

    கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.


    மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள குமான் பகுதியில்தான் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு மட்டுமே 42 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    உத்தரகாண்டின் முக்கிய சுற்றுலா தலமான நைனிடால் நகரமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெரிய ஏரி முழுவதுமாக நிரம்பி அதன் தண்ணீர் நைனிடாலை சூழ்ந்து கொண்டது. இதனால் அந்த நகரம் மற்ற இடங்களில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவினால் பல சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அங்கு போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

    வெள்ள சேத பகுதிகளை முதல்-மந்திரி புஷ்கார் சிங் டாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு வெள்ள நிலைமைகளை கேட்டறிந்தார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று அவர் முதல்-மந்திரியிடம் உறுதி அளித்தார்.

    நேற்றும், இன்றும் மழை குறைந்துள்ளது. இதனால் மீட்புபணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    Next Story
    ×