என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் சரக்குகளை கையாள மாட்டோம் - அதானி நிறுவனம்
Byமாலை மலர்11 Oct 2021 8:20 PM GMT (Updated: 11 Oct 2021 8:20 PM GMT)
குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மும்பை:
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி ஆகும். இந்த போதைப்பொருள் ஈரானில் இருந்து வந்ததாக தகவல் வெளியானது.
முந்த்ரா துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் நிறுவனமான அதானி குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளது. இச்சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சரக்குகளை கையாளப் போவதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 15-ம் தேதி முதல் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை அதானி நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் கையாளாது என தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...இடுக்கி, கொல்லம் உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X