search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

    பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஐந்து வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக ஸ்ரீநகரில் தாக்குதல் அதிகமாக உள்ளது.  நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், ஸ்ரீநகரில் இரண்டு ஆசிரியர்கள் கொலைக்கு காரணமான நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

    இந்த நிலையில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் ஜே.சி.ஓ. மற்றும் நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரவிக்கின்றன.
    Next Story
    ×