search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவராஜ் சிங் சவுகான்
    X
    சிவராஜ் சிங் சவுகான்

    பெண்கள் பெயரில் நிலம் இருந்தால், பதிவுக் கட்டணத்தில் விலக்கு: ம.பி. முதலமைச்சர் அறிவிப்பு

    மத்திய பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் பெண்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
    மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சிவ்பூரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெண்கள் பெயரில் நிலம் இருந்தால், அந்த நிலத்திற்கான பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். சில நியாய விலைக்கடைகளை சுய உதவிக்குழு பெண்கள் மூலம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளோம்.

    உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் நிலையங்களிலும் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். கிராமங்களில் பெண்கள் மின்சார கட்டணத்தை வசூல் செய்வார்கள். அவற்றில் 10 சதவீதம் அவர்களின் ஊதியமாக கணக்கில் செலுத்தப்படும்.  ஊட்டச்சத்து உணவு ஆலைகளும் பெண்கள் மூலமாக இயக்கப்படும்.

    இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
    Next Story
    ×