என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயல்டி மூலம் யூடியூபில் இருந்து மாதந்தோறும் ரூ. 4 லட்சம் கிடைக்கிறது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொல்கிறார்
Byமாலை மலர்17 Sep 2021 5:15 PM GMT (Updated: 17 Sep 2021 5:15 PM GMT)
950-க்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூபில் அப்லோடு செய்துள்ளேன். அதன்மூலம் மாதம் 4 லட்சம் ரூபாய் ராயல்டி கிடைக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லி- மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலைப் பணியை பரூச் என்ற இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது, யூடியூபில் இருந்து மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் ராயல்டி மூலமா வருகிறது எனக் கூறினார்.
இதுகுறித்து நிதின் கட்கரி கூறுகையில் ‘‘நான் கொரோனா ஊரடங்கு சமயத்தில் இரண்டு விஷயங்களை செய்தேன். ஒன்று வீட்டில் சமையல் செய்து சமையல்காரரானேன். மற்றொன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினேன். ஆன்லைனில் 950-க்கும் மேற்பட்ட கலந்துரையாடல் செய்தேன். வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுடனும் கலந்துரையாடினேன். அந்த வீடியோக்களை யூடியூபில் அப்லோடு செய்தேன்.
என்னுடைய யூடியூப் சேனலுக்கு அதிகபேர் வந்தனர். இதனால் யூடியூப் தற்போது எனக்கு மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய் ராயல்டியாக தருகிறது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X