search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் தேங்கிய மழைநீர்
    X
    சாலையில் தேங்கிய மழைநீர்

    டெல்லியில் 3-வது நாளாக மழை நீடிப்பு

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 117.7 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை கொட்டியது. 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு கனமழை ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர்தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இன்று 3-வது நாளாக டெல்லியில் மழை நீடித்தது. கடந்த 24 மணி நேரத்தில் 117.7 மில்லி மீட்டர் மழை பெய்தது. இது செப்டம்பர் மாதத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதிக மழை ஆகும். இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சில பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.
    Next Story
    ×