என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா- வங்காளதேசம் இடையே செப்டம்பர் 3ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை
Byமாலை மலர்28 Aug 2021 5:05 PM GMT (Updated: 28 Aug 2021 5:05 PM GMT)
ஏர் பபிள் எனப்படும் சிறப்பு ஒப்பந்தம் மூலம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு நாடுகள் இடையே விமானங்கள் இயக்கப்படுகின்றன.
புதுடெல்லி:
கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமானப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏர் பபிள் எனப்படும் சிறப்பு ஒப்பந்தம் மூலம், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு நாடுகள் இடையே விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில், ‘வந்தே பாரத்’ திட்டம் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக கடந்த ஆண்டு மே மாதம் முதல் ‘ஏர் பபிள்’ திட்டம் மூலம் அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா 2வது அலை அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-வங்காளதேசம் இடையிலான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இரு நாடுகள் இடையே ஏர் பபிள் ஒப்பந்தத்தின்கீழ் விமான சேவை தொடங்க உள்ளது. இந்தியா-வங்காளதேசம் இடையே செப்டம்பர் 3ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X