search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    உத்தரகாண்ட் மாநிலத்திற்கான முக்கிய அறிவிப்பை நாளை ஆம் ஆத்மி வெளியிடும்: கெஜ்ரிவால்

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நாளை உத்தரகாண்ட் மாநிலம் செல்ல இருக்கும் நிலையில் முக்கிய அறிவிப்பை ஆம் ஆத்மி வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
    70 சட்டசபை இடங்களை கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி உத்தரகாண்ட் மாநிலத்திலும் கால்பதிக்க விரும்புகிறது.

    அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான கெஜ்ரிவால் நாளை உத்தரகாண்ட் செல்கிறார். அப்போது ஆம் ஆத்மி கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிடும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலின்போது, மாநில வளர்ச்சிக்கான விவகாரத்தை கையில் எடுத்து பிரச்சாரம் செய்வோம் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
    Next Story
    ×