search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருப்பதி பஸ் நிலையத்தில் 4 மாத ஆண் குழந்தை கடத்தல்

    திருப்பதி பஸ் நிலையத்தில் 4 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி அலிபிரி அருகே உள்ள பாலாஜி பஸ் நிலையத்தில் நேற்று இரவு வீரபத்திரா மற்றும் கங்குலம்மா ஆகியோர் தனது 4 மாத ஆண் குழந்தையுடன் தங்கி இருந்தனர்.

    இருவரும் வழக்கமாக திருப்பதி அலிபிரி பாலாஜி பஸ் நிலையத்தில் தங்குவது வழக்கம். அவர்களுக்கு அருகில் ஆஷா என்ற பெண் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பொருட்கள் வாங்க வீரபத்திரா கடைக்கு சென்றார்.

    கங்குலம்மா தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு ஆஷாவிடம் விட்டு விட்டு குளிக்க சென்றார். கங்குலம்மா குளித்து விட்டு வந்து பார்த்தபோது குழந்தையுடன் ஆஷா காணாமல் போனார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கங்குலம்மா ஆஷாவையும் குழந்தையும் பல்வேறு இடங்களில் தேடினார்.

    ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதுகுறித்து வீரபத்திரா அலிபிரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஷாவின் செல்போனை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆஷா கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஒருவருடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதுகுறித்து அலிபிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரா வழக்குப்பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்ற ஆஷாவை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×