என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்- கெஜ்ரிவால்
Byமாலை மலர்3 Aug 2021 3:42 PM GMT (Updated: 3 Aug 2021 3:42 PM GMT)
டெல்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது.
டெல்லியில் நங்கல் என்ற இடத்தில் 9 வயதி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்யப்பட்டு வலுக்கட்டாயமாக உடல் எரியூட்டப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது விமர்சனம் எழுப்பி வருகின்றனர். பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால், உள்துறை அமைச்சரான அமித் ஷா, இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ‘‘டெல்லியில் 9 வயது சிறும் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் அவமானம். டெல்லியின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X