என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொச்சி கடற்படை தளத்தில் டிரோன் பறந்ததால் பரபரப்பு
Byமாலை மலர்30 July 2021 10:06 PM GMT (Updated: 30 July 2021 10:06 PM GMT)
காஷ்மீரின் ஜம்மு விமான படைத்தளத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 2 மர்ம டிரோன்கள் பறந்து வந்து தாக்குதல் நடத்தின.
கொச்சி:
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ளது. அதே பகுதியில் பழைய தொப்பம்பாடி பாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு மேலே கடந்த 26-ம் தேதி ஒரு டிரோன் பறந்தது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்படி சிவில், தனியார், ராணுவ விமான நிலையங்களின் 3 கி.மீ. சுற்றளவில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ராணுவ அமைப்புகள், தளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் முன் அனுமதியின்றி 3 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன்கள் பறக்க தடை உள்ளது.
எனவே கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ளதால், அங்கு எந்த வித அனுமதியும் இன்றி இந்த டிரோனை பறக்க விட்டது குற்றமாகும்.
இந்த டிரோனை கடற்படையினர் கைப்பற்றி போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இந்த டிரோனை பறக்க விட்டவர் கொச்சியின் வடுதலா பகுதியை சேர்ந்த 26 வயது வாலிபர் என தெரிய வந்தது. அவர் சுற்றுலா தொடர்பான தனது வலைத்தளத்தில் பதிவிடவும், யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யவும்தான் இந்த டிரோனை பறக்க விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் கடற்படை கட்டளை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோனை பறக்க விட எந்தவித முன்அனுமதியும் பெறவில்லை.
இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த டிரோனை பறக்க விட்ட நபர் அதை மற்றொரு நபரிடம் இருந்து ஓ.எல்.எக்ஸ். தளம் வழியாக ரூ.1 லட்சத்துக்கு பெற்றதாக கூறினார். எனவே இதற்காக அவரால் எந்தவொரு பில்லையும் தர முடியவில்லை” என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக டிரோனை பறக்க விட்ட நபர் மீது போலீசார் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவுகள் 151 மற்றும் 102-ன்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X