search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜூலை 30 வரை நீட்டிப்பு

    மேற்கு வங்காளத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதி நிகழ்ச்சியில் 20 பேர் வரையிலும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்காளத்தில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் ஜூலை 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் அப்படியே தொடரும் எனவும்  அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

    அதன்படி வார இறுதி நாள்களைத் தவிர மற்ற நாள்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயங்க மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதி நிகழ்ச்சியில் 20 பேர் வரையிலும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள் உள்பட அனைத்து விதமான கடைகளும் வழக்கமான நேரங்களில் திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


    Next Story
    ×