என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிராமத்தில் புகுந்த 13 அடி நீள கருநாக பாம்பை துணிச்சலுடன் பிடித்த வாலிபர்
Byமாலை மலர்9 July 2021 10:27 AM GMT (Updated: 9 July 2021 10:27 AM GMT)
கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் புகுந்த கருநாக பாம்பு காவிரி ஆறு பிறப்பிடமான பாகமண்டலா பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள ஏரி அருகே காட்டில் விடப்பட்டது.
நகரி:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மூர்நாடு கிராமத்தில் 13 அடி நீள கருநாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் பாம்பை கண்டு பதறியடித்தபடி ஓடினார்கள்.
அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அங்குள்ள பாம்பு பிடிக்கும் வாலிபரான சூரிய கீர்த்தி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக விரைந்து சென்று 13 அடி நீள கருநாக பாம்பை மிகவும் லாவகமாக கையால் பிடித்தார்.
பலமுறை பாம்பு அவரது கைகளில் இருந்து நழுவியது. இருந்தாலும் அவர் விடாப்பிடியாக பாம்பை பிடித்தார். அவர் கைகளில் பிடித்து வைத்திருந்த பாம்பு பட மெடுத்து ஆடியபடி காணப்பட்டது. இதை அந்த பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.
பின்னர் சூரிய கீர்த்தி அந்த பாம்பை காவிரி ஆறு பிறப்பிடமான பாகமண்டலா பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள ஏரி அருகே காட்டில் விட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X