என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்புக்கு அசாதாரண வெப்ப நிலை காரணம் - ஆய்வு தகவல்
Byமாலை மலர்8 July 2021 9:14 PM GMT (Updated: 8 July 2021 9:14 PM GMT)
உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
புதுடெல்லி:
பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
* 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.
* இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.
* உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.
* இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
* 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.
* இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.
* உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.
* இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X