search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்புக்கு அசாதாரண வெப்ப நிலை காரணம் - ஆய்வு தகவல்

    உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
    புதுடெல்லி:

    பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

    இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.

    * 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.

    * இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.

    * உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.

    * இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×