என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி தனிக் கட்சி தொடங்கினார்
Byமாலை மலர்8 July 2021 4:47 PM GMT (Updated: 8 July 2021 4:47 PM GMT)
தெலுங்கானாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகர ராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை என ஷர்மிளா குற்றம்சாட்டினார்.
ஐதராபாத்:
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் பெயர் ‘ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி’ என்பதாகும். தன் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளில் கட்சியை தொடங்கியிருக்கிறார்.
கட்சியை தொடங்கி வைத்த பின்னர் ஷர்மிளா பேசுகையில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கம் தனது வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டதால், தெலுங்கானா மக்களின் கனவுகள் முழுவதும் சிதைந்துவிட்டதாக கூறினார்.
‘உபரி பட்ஜெட்டைக் கொண்ட மாநிலத்தில், ஏழை குடும்பத்தினர் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், தனியார் / கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். தெலுங்கானாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகர ராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை. சந்திரசேகர ராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு செல்வச்செழிப்புடன் இருக்கிறது’ என்றும் சர்மிளா குற்றம்சாட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X