search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனி கட்சி தொடங்கிய ஷர்மிளா
    X
    தனி கட்சி தொடங்கிய ஷர்மிளா

    ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி தனிக் கட்சி தொடங்கினார்

    தெலுங்கானாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகர ராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை என ஷர்மிளா குற்றம்சாட்டினார்.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் பெயர் ‘ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி’ என்பதாகும். தன் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளில் கட்சியை தொடங்கியிருக்கிறார். 

    கட்சியை தொடங்கி வைத்த பின்னர் ஷர்மிளா பேசுகையில், சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கம் தனது வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டதால், தெலுங்கானா மக்களின் கனவுகள் முழுவதும் சிதைந்துவிட்டதாக கூறினார்.

    கட்சி துவக்க விழாவில் பங்கேற்ற தொண்டர்கள்

    ‘உபரி பட்ஜெட்டைக் கொண்ட மாநிலத்தில், ஏழை குடும்பத்தினர் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், தனியார் / கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். தெலுங்கானாவில் கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகர ராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையிலிருந்து மீளவில்லை. சந்திரசேகர ராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு செல்வச்செழிப்புடன் இருக்கிறது’ என்றும் சர்மிளா குற்றம்சாட்டினார்.
    Next Story
    ×