search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    12 மத்திய மந்திரிகளின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

    மந்திரி சபை விரிவாக்கத்திற்கு முன்னதாக, ஹர்ஷ வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய மந்திரிகள் 12 பேர் ராஜினாமா செய்தனர்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று விரிவாக்கம்  செய்யப்படுகிறது. மத்திய மந்திரிகளாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 43 பேர் பதவியேற்க உள்ளனர். 

    ஏற்கனவே மந்திரி சபையில் இருந்த ஹர்ஷ வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய மந்திரிகள் 12 பேர், மந்திரிசபை விரிவாக்கத்திற்கு முன்னதாக அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக குடியரசு தலைவர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×