search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    மணிப்பூர், அருணாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து நில அதிர்வு

    கடந்த சில தினங்களுக்கு முன் அசாம், மணிப்பூர் மற்றும் மேகாலயா என வடமாநிலங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்பட்டது.
    புதுடெல்லி:

    மணிப்பூர் மாநிலத்தின் ஷிருயி பகுதியில் இன்று அதிகாலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
     
    மேலும், அருணாசல பிரதேசத்தின் பான்கெயின் பகுதியில் இன்று அதிகாலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    அதிகாலையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கங்களால் வடமாநில மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×