search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெற வந்தவர்கள்
    X
    சிகிச்சை பெற வந்தவர்கள்

    உ.பி.யில் சோகம் - சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் பலி

    உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் சிக்கிக் கொண்டனர்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காகரோல் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் படுகாயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    ஆனால், செல்லும் வழியிலேயே 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். 3 முதல் 8 வயதுக்குள் இருக்கும் அவர்களில் ஒரு சிறுவனும், 2 சிறுமியும் அடங்குவார்கள்.

    சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மொத்தம் 9 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என ஆக்ரா மாவட்ட மாஜிஸ்திரேட் பிரபு சிங் தெரிவித்துள்ளார்.

    சுவர் இடிந்து விழுந்து 3 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×