என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘ஒரே நாடு, ஒரே ரேசன்’ திட்டத்தை நடைமுறை படுத்துவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை- மம்தா பானர்ஜி
Byமாலை மலர்14 Jun 2021 12:04 PM GMT (Updated: 14 Jun 2021 12:04 PM GMT)
தயவு செய்து சாக்குபோக்கு கூற வேண்டாம், திட்டத்தை அமல்படுத்துங்கள் என மேற்கு வங்காள அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேசன் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி ஒருவர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன.
மேற்கு வங்காளம், டெல்லி உள்பட மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையவில்லை. கடந்த வாரம் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து ஒன்றை வெளியிட்டது. அப்போது ‘‘தயவு செய்து சாக்குபோக்கு கூற வேண்டாம். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் இணையுங்கள்’’ என மேற்கு வங்காளத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் ‘‘ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது’’ என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X