என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
Byமாலை மலர்11 Jun 2021 12:33 AM GMT (Updated: 11 Jun 2021 12:33 AM GMT)
தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் புரி ஜெகநாதர் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு தெரிவித்து உள்ளது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் புரி ஜெகநாதர் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி நடைபெறுகிறது. ஆனால் கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒடிசாவிலும் தொற்று மிகவும் வீரியமாக உள்ளது. எனவே தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு தெரிவித்து உள்ளது.
இது குறித்து சிறப்பு நிவாரண கமிஷனர் ஜெனா நேற்று கூறுகையில், ‘ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதைப்போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
ரத யாத்திரையின்போது புரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் எனக்கூறிய அவர், கடந்த ஆண்டைப்போல மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து மகிழலாம் என தெரிவித்தார்.
2 டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் கொரோனா இல்லாத 500 ஊழியர்கள் மட்டுமே ரதத்தை இழுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
ஒடிசாவின் புரி ஜெகநாதர் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி நடைபெறுகிறது. ஆனால் கொரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒடிசாவிலும் தொற்று மிகவும் வீரியமாக உள்ளது. எனவே தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு தெரிவித்து உள்ளது.
இது குறித்து சிறப்பு நிவாரண கமிஷனர் ஜெனா நேற்று கூறுகையில், ‘ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதைப்போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
ரத யாத்திரையின்போது புரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் எனக்கூறிய அவர், கடந்த ஆண்டைப்போல மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து மகிழலாம் என தெரிவித்தார்.
2 டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் கொரோனா இல்லாத 500 ஊழியர்கள் மட்டுமே ரதத்தை இழுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X