என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
Byமாலை மலர்8 Jun 2021 11:13 AM GMT (Updated: 8 Jun 2021 11:13 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவை (காணொலி) கூட்ட சபாநாயகர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தொடங்கும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளதால், கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் தொடங்கும். அதேபோல் தற்போதும் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாடாளுமன்றம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்து வருகிறோம். ஜூலையில் அனைத்து எம்.பி.க்களும், ஸ்டாஃப்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.
ஒவ்வொரு துறைக்கும் தனித்தனித நாடாளுமன்ற நிலைக்குழு உண்டு. அந்தந்த துறைக்கான முக்கிய முடிவுகள் குறித்து இந்த குழு விவாதிக்கும். இந்த குழுவை சமீப காலகமாக கூட்ட வேண்டும் (காணொலி) என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் இரு அவை சபாநாயகர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X