என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு
Byமாலை மலர்1 Jun 2021 1:01 AM GMT (Updated: 1 Jun 2021 1:01 AM GMT)
உத்தர பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவத்தில் 2 கமிஷனர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுபானம் அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, லோதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்சுவா, அண்ட்லா கிராமங்கள், ஜவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரத் கிராமத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுகிறது. வியாழக்கிழமை முதல் இன்று வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய தொழில் நடத்தி வரும் 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் கலால் வரி கமிஷனர்கள் 2 பேர் உள்பட கலால் வரித்துறையை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர்கள் உள்பட 7 பேரும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய கிராமத்தினர் 17 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுபானம் அருந்திய பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, லோதா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்சுவா, அண்ட்லா கிராமங்கள், ஜவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேரத் கிராமத்தைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுகிறது. வியாழக்கிழமை முதல் இன்று வரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய தொழில் நடத்தி வரும் 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், உ.பி.யில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்தில் கலால் வரி கமிஷனர்கள் 2 பேர் உள்பட கலால் வரித்துறையை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கமிஷனர்கள் உள்பட 7 பேரும் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடைய கிராமத்தினர் 17 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X