என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு -புதிய தளர்வுகள்
Byமாலை மலர்31 May 2021 8:22 AM GMT (Updated: 31 May 2021 8:22 AM GMT)
பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவியதையடுத்து, கடந்த 5ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறையாததால் மே 13ம் தேதிக்கு பிறகு ஒவ்வொரு வாரமாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ளது. எனினும், தினசரி தொற்று சுமார் 1500 என்ற அளவில் இருப்பதால் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வணிகங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கூறி உள்ளார். பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
பீகாரில் நேற்று ஒரே நாளில் 1475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X