என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ம.பி.: மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல்களை கடித்து குதறிய எலிகள்- பால்கொடுக்க எழுந்த தாய் அதிர்ச்சி
Byமாலை மலர்18 May 2021 12:39 PM GMT (Updated: 18 May 2021 12:39 PM GMT)
அதிகாலை பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்க தாய் எழுந்தபோது, குழந்தையைின் விரல்களை எலிகள் கடித்து குதறியதை கண்டு அதிர்ச்சி அடைந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவில் ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்கு பால் கொடுக்க அந்த பெண் சென்றுள்ளார். அப்போது குழந்தையின் கால் விரல்களை எலி கடித்து திண்றதை பார்த்து பேரதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உறவினர்களிடம் இதுகுறித்து கூறினார். அவர்கள் மருத்துவமனையில் இதுகுறித்து புகார் அளித்தனர். குழந்தையின் தந்தை இதுகுறித்து கூறுகையில் ‘‘என்னுடைய மனைவி அதிகாலை 3 மணியளவில் குழந்தைக்கு பால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது எலிகள் எனது குழந்தையின் கால் விரல்களை கடித்து குதறியதை பார்த்துள்ளார். தற்போது என குழந்தையின் காலில் கால் விரல்கள் இல்லை’’ என வேதனையுடன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மருத்துவமனை சூப்பிரெண்டு டாக்டர் பிரேமந்த்ரா தாகூர் கூறுகையில் ‘‘குழந்தைக்கான சிகிச்சை தொடங்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X