என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் பலத்த பாதுகாப்புடன் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு - 35 தொகுதிகளுக்கு நடக்கிறது
Byமாலை மலர்28 April 2021 9:45 PM GMT (Updated: 28 April 2021 9:45 PM GMT)
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கிறது.
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று (ஏப்.29-ந்தேதி) நடைபெறுகிறது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.
35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தீர்மானிக்கப்போகின்றனர்.
மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இன்று தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஷாஷி பாஞ்சா, நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி சதான் பாண்டே உள்ளிட்ட பிரமுகர்களும் அடங்குவர்.
தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இறுதிகட்ட தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கிறது.
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று (ஏப்.29-ந்தேதி) நடைபெறுகிறது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.
மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இன்று தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஷாஷி பாஞ்சா, நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி சதான் பாண்டே உள்ளிட்ட பிரமுகர்களும் அடங்குவர்.
தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இறுதிகட்ட தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X