என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.100 கோடி லஞ்சப் புகார்... மகாராஷ்டிரா முன்னாள் மந்திரியிடம் சிபிஐ தீவிர விசாரணை
Byமாலை மலர்14 April 2021 6:23 AM GMT (Updated: 14 April 2021 6:27 AM GMT)
சிபிஐ விசாரணைக்கு எதிராக அனில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான லஞ்சப் புகார் குறித்து சிபிஐ விசாரிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு பூர்வாங்க ஆதாரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படியும் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அனில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, சிபிஐ விசாரணையை தொடங்கியது.
விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்பேரில், இன்று காலை மும்பை சான்டாகுரூஸ் பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகைக்கு வந்து, சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் அனில் தேஷ்முக். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்பி விசாரணை நடத்தினர். அவர் அளிக்கும் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனில் தேஷ்முக் மீது புகார் கொடுத்த முன்னாள் கமிஷனர் பரம் பீர் சிங், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாசே, துணை கமிஷனர் ராஜு புஜ்பால், உதவி கமிஷனர் சஞ்சய் பாட்டீல், வழக்கறிஞர் ஜெயஸ்ரீ பாட்டீல், ஓட்டல் உரிமையாளர் மகேஷ் ஷெட்டி ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X