என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயிருடன் உள்ள கொரோனா நோயாளியை இறந்ததாக கூறி மற்றொருவர் உடலை ஒப்படைத்த மருத்துவமனை நிர்வாகம்
Byமாலை மலர்13 April 2021 2:55 AM GMT (Updated: 13 April 2021 2:55 AM GMT)
பீகார் அரசு ஆஸ்பத்திரியில் உயிருடன் உள்ள கொரோனா நோயாளியை இறந்ததாக கூறி மற்றொருவர் உடலை ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மக்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுன்னு குமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், சுன்னு குமார் இறந்துவிட்டதாக அவரது சகோதரரிடம் தெரிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகிகள், இறந்த வேறொருவரின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்து சுன்னு குமாரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டதும் பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதினார். அதில், இந்த விஷயம் குறித்து விசாரித்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள மக்மத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சுன்னு குமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், பாட்னா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், சுன்னு குமார் இறந்துவிட்டதாக அவரது சகோதரரிடம் தெரிவித்த ஆஸ்பத்திரி நிர்வாகிகள், இறந்த வேறொருவரின் உடலை அவரிடம் ஒப்படைத்தனர். அதைப் பார்த்து சுன்னு குமாரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டதும் பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட்டு, அரசு ஆஸ்பத்திரி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதினார். அதில், இந்த விஷயம் குறித்து விசாரித்து, தவறுக்கு காரணமானவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X