என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொற்கோவிலுக்கு வருகை தந்த பாகிஸ்தான் சிந்து நதி ஆணைய குழு
Byமாலை மலர்25 March 2021 10:05 AM GMT (Updated: 25 March 2021 10:05 AM GMT)
சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பாக எதிர்காலத்திலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என பாகிஸ்தான் ஆணையர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமிர்தசரஸ்:
சிந்து நதி நீர் பகிர்வு தொடர்பான நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் 2 நாட்கள் நடைபெற்றது. பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையர் சையத் முகமது மெஹர் அலி ஷா தலைமையிலான குழு, இந்தியாவின் சிந்து நதி ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து நதி ஆணைய குழுவினர் இன்று அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். பாகிஸ்தான் ஆணையருக்கு நினைவுப்பரிவு வழங்கி கவுரவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் ஆணையர், எதிர்காலத்திலும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார். பொற்கோவிலுக்கு வந்தது அற்புதமான அனுபவம் என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X