என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் பேரிடர் - 40 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகரிப்பே காரணம்
Byமாலை மலர்6 March 2021 11:51 PM GMT (Updated: 6 March 2021 11:51 PM GMT)
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டேராடூன்:
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுமானத்தில் இருந்த 2 நீர்மின் நிலையங்கள் இதில் மூழ்கின. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த கோர சம்பவத்தில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 132 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை. இந்த நிலையில் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை கனமழை பெய்தது மற்றும் உத்தரகாண்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகரித்தது ஆகியவையே பனிப்பாறைகள் உடைந்து விழுவதற்கு காரணம் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ஐ.சி.ஐ.எம்.ஓ.டி) என்கிற அமைப்பு உத்தரகாண்ட் பேரிடர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “பனிப்பொழிவு இல்லாதது மற்றும் சூரிய கதிர் வீச்சின் வெளிப்பாடு அதிகரித்தது ஆகியவற்றின் விளைவாக பனிப்பாறைகளின் ஸ்திரத்தன்மை குறைந்து பாறைகள் உடைந்திருக்கக்கூடும். அத்துடன் பிப்ரவரி 4 முதல் 6 வரையிலான கடுமையான மழை பொழிவும் இந்த பேரிடர் நிகழ்வதற்கு சாதகமாக இருந்திருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுமானத்தில் இருந்த 2 நீர்மின் நிலையங்கள் இதில் மூழ்கின. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த கோர சம்பவத்தில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 132 பேரின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை. இந்த நிலையில் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை கனமழை பெய்தது மற்றும் உத்தரகாண்டில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகரித்தது ஆகியவையே பனிப்பாறைகள் உடைந்து விழுவதற்கு காரணம் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ஐ.சி.ஐ.எம்.ஓ.டி) என்கிற அமைப்பு உத்தரகாண்ட் பேரிடர் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “பனிப்பொழிவு இல்லாதது மற்றும் சூரிய கதிர் வீச்சின் வெளிப்பாடு அதிகரித்தது ஆகியவற்றின் விளைவாக பனிப்பாறைகளின் ஸ்திரத்தன்மை குறைந்து பாறைகள் உடைந்திருக்கக்கூடும். அத்துடன் பிப்ரவரி 4 முதல் 6 வரையிலான கடுமையான மழை பொழிவும் இந்த பேரிடர் நிகழ்வதற்கு சாதகமாக இருந்திருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X