என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டூல்கிட் வழக்கு... திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
Byமாலை மலர்20 Feb 2021 1:35 PM GMT (Updated: 20 Feb 2021 1:35 PM GMT)
சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டூல்கிட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் போலீஸ் காவல் முடிவடைந்ததும் அவரை மூன்று நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டது.அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது? ஜனவரி 26ல் நடந்த வன்முறைக்கும் டூல்கிட்டுக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா? என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும், மேலும் சில தகவல்களை பெற வேண்டியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.
திஷா தரப்பில் தரப்பில் அவரது வழக்கறிஞர் சித்தார்த்த அகர்வால் வாதாடினார். அதில், திஷா ரவியின் செயல்பாடுகள், அவருக்கும் காலிஸ்தான் இயக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை காட்டுவதாக கூறினார். சீக்கியர்களுக்காக நீதி அமைப்புடன் அவர் தொடர்பில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜாமீன் மனு மீதான உத்தரவை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X