என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் சோதனை
Byமாலை மலர்20 Feb 2021 12:10 AM GMT (Updated: 20 Feb 2021 12:10 AM GMT)
எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கும் ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் சோதனை நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி:
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே ‘ஹெலினா’, ‘துருவஸ்திரா’ என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இவை எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கக் கூடியவை. எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படக் கூடியவை.
இந்நிலையில், ராணுவத்தின் பயன்பாட்டுக்கான ஹெலினா, விமானப்படையின் பயன்பாட்டுக்கான துருவஸ்திரா ஏவுகணைகளின் சோதனை நேற்று ஒரு பாலைவன பகுதியில் நடைபெற்றது.
அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. குறுகிய தூர இலக்கு, நீண்ட தூர இலக்கு, நிலையான இலக்கு, சுழன்று கொண்டிருக்கும் இலக்கு என எல்லா வகையிலும் ஏவுகணைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.
ஆயுதங்கள் பொருத்தி, கைவிடப்பட்ட டாங்கிகள் மீது ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே ‘ஹெலினா’, ‘துருவஸ்திரா’ என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இவை எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கக் கூடியவை. எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படக் கூடியவை.
இந்நிலையில், ராணுவத்தின் பயன்பாட்டுக்கான ஹெலினா, விமானப்படையின் பயன்பாட்டுக்கான துருவஸ்திரா ஏவுகணைகளின் சோதனை நேற்று ஒரு பாலைவன பகுதியில் நடைபெற்றது.
அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. குறுகிய தூர இலக்கு, நீண்ட தூர இலக்கு, நிலையான இலக்கு, சுழன்று கொண்டிருக்கும் இலக்கு என எல்லா வகையிலும் ஏவுகணைகள் சோதித்துப் பார்க்கப்பட்டன.
ஆயுதங்கள் பொருத்தி, கைவிடப்பட்ட டாங்கிகள் மீது ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X