என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவதூறு வழக்கு: ஆஜராகும்படி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நீதிமன்றம் சம்மன்
Byமாலை மலர்19 Feb 2021 11:22 AM GMT (Updated: 19 Feb 2021 11:22 AM GMT)
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியை அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அமித் ஷாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 11-ந்தேதி அவதூறு பரப்பு வகையில் பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி தலைமையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, வருகிற 22-ந்தேதி அமித் ஷா நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் அவரது வக்கீல் மூலமாக அஜராகலாம் என நீதிபதி தெரிவித்து சம்மன் அனுப்பியுள்ளார்.
மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு பரப்பும் வகையில் அமித் ஷா பேசியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X