என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கோப்புப்படம் கோப்புப்படம்](https://img.maalaimalar.com/Articles/2021/Feb/202102190736043542_Tamil_News_After-Rajasthan-petrol-price-crosses-100mark-in-Madhya_SECVPF.gif)
X
கோப்புப்படம்
ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்தது
By
மாலை மலர்19 Feb 2021 2:06 AM GMT (Updated: 19 Feb 2021 2:06 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் இந்த விலை உயர்வு நீடித்தது.
நேற்றுமுன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அன்றைய தினம் அங்கு ரூ.100.13-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று 36 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.49-க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர் ரூ.92.47-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது.
அதன்படி நேற்று அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 32 பைசாவும் அதிகரித்தது.
இதன் காரணமாக மத்தியபிரதேசத்தின் அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.25-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.35-க்கும் விற்பனையானது.
விலை உயர்வால் நேற்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.89.88 ஆகவும், டீசல் ரூ.80.27 ஆகவும் விற்கப்பட்டது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96.32-க்கும், டீசல் லிட்டர் ரூ.87.32-க்கும் விற்பனையானது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் இந்த விலை உயர்வு நீடித்தது.
நேற்றுமுன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அன்றைய தினம் அங்கு ரூ.100.13-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று 36 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.49-க்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர் ரூ.92.47-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், ராஜஸ்தானை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து உள்ளது.
அதன்படி நேற்று அம்மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 32 பைசாவும் அதிகரித்தது.
இதன் காரணமாக மத்தியபிரதேசத்தின் அனுப்பூரில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.25-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.35-க்கும் விற்பனையானது.
விலை உயர்வால் நேற்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.89.88 ஆகவும், டீசல் ரூ.80.27 ஆகவும் விற்கப்பட்டது. மும்பையில் பெட்ரோல் லிட்டர் ரூ.96.32-க்கும், டீசல் லிட்டர் ரூ.87.32-க்கும் விற்பனையானது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)