search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தபோவன் சுரங்கத்தில் மீட்பு பணி
    X
    தபோவன் சுரங்கத்தில் மீட்பு பணி

    உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு- உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களில் இதுவரை 53 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    டேராடூன்:

    உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. உருகிய பனிக்கட்டிகள் நீராக பெருக்கெடுத்து தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா ஆற்றில் கலந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தபோவன் அணை, அருகேயிருந்த ரிஷிகங்கா மின்நிலையம், சுற்றியிருந்த வீடுகள் ஆகியவை பாதிப்படைந்தன. மின்நிலையத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பலர், சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

    நேற்று வரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு 53 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 53 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதை மாநில பேரிடர் மீட்பு படை உறுதி செய்துள்ளது. மேலும், தபோவன் சுரங்கத்தில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுவதாகவும் கூறி உள்ளது.
    Next Story
    ×