என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 64 பேரின் கதி என்ன?
Byமாலை மலர்14 Feb 2021 12:51 AM GMT (Updated: 14 Feb 2021 12:51 AM GMT)
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
லக்னோ:
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்தது. இதனால் பெரும் பனிச்சரிவும், அலெக்நந்தா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இந்த திடீர் பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் உத்தரகாண்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளர்களும் அடங்குவர். இந்த மாநிலத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் இன்னும் 60-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இது குறித்து உத்தரபிரதேச பேரிடர் நிவாரண கமிஷனர் சஞ்சய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரகாண்டின் ஜோஷிமடத்தில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பு மற்றும் வெள்ளப்பெருக்கில் 13-ந்தேதி (நேற்று) நிலவரப்படி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளனர். இன்னும் 64 பேரை காணவில்லை. அதேநேரம் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்தது. இதனால் பெரும் பனிச்சரிவும், அலெக்நந்தா நதியில் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இந்த திடீர் பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை. அவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் உத்தரகாண்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தை சேர்ந்த பல தொழிலாளர்களும் அடங்குவர். இந்த மாநிலத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம் இன்னும் 60-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இது குறித்து உத்தரபிரதேச பேரிடர் நிவாரண கமிஷனர் சஞ்சய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரகாண்டின் ஜோஷிமடத்தில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பு மற்றும் வெள்ளப்பெருக்கில் 13-ந்தேதி (நேற்று) நிலவரப்படி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளனர். இன்னும் 64 பேரை காணவில்லை. அதேநேரம் 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த 64 பேரின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X