என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலம் ஆக்க விரும்புகிறோம் - சிவராஜ் சிங் சவுகான்
Byமாலை மலர்6 Feb 2021 10:40 PM GMT (Updated: 6 Feb 2021 10:40 PM GMT)
மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக்க விரும்புவதாக அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்:
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார்.
இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள கட்னி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் மது பானத்திற்கு தடை விதிக்க எனது அரசு விரும்புகிறது. மது இல்லாத மாநிலம் ஆக்குவதே எங்கள் விருப்பம். இதை மதுபானத்துக்கு தடை விதிப்பதால் மட்டும் செய்துவிட முடியாது. குடிப்பவர்களுக்கு மதுபானம் தொடர்ந்து வழங்கப்படும்.
ஆனால் நாங்கள் மதுபானம் இல்லா பிரச்சாரத்தை நடத்துவோம். அப்போது குடிப்பவர்கள் மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். இந்நடவடிக்கையால் நாங்கள் மது இல்லாத மாநிலமாக மாற்றி விடுவோம். இந்த தீர்மானத்தை நாங்கள் எடுத்தே ஆக வேண்டும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X