search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்: 10 பேர் பலி

    உத்தரபிரதேசத்தில் பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
    ஆக்ரா:

    உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குன்டர்தி போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட பகுதியில் மொராதாபாத் - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதில் அருகே செல்லும் வாகனங்கள் கூட தெரியவில்லை.

    அப்போது பயணிகள் பஸ்சும், லாரி உள்பட 3 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்றாக பயங்கரமாக மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் நொறுங்கின. அங்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.


    Next Story
    ×