என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்: 10 பேர் பலி
Byமாலை மலர்30 Jan 2021 5:43 AM GMT (Updated: 30 Jan 2021 8:51 AM GMT)
உத்தரபிரதேசத்தில் பனி மூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஆக்ரா:
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குன்டர்தி போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட பகுதியில் மொராதாபாத் - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதில் அருகே செல்லும் வாகனங்கள் கூட தெரியவில்லை.
அப்போது பயணிகள் பஸ்சும், லாரி உள்பட 3 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்றாக பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் நொறுங்கின. அங்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குன்டர்தி போலீஸ் நிலை யத்துக்குட்பட்ட பகுதியில் மொராதாபாத் - ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதில் அருகே செல்லும் வாகனங்கள் கூட தெரியவில்லை.
அப்போது பயணிகள் பஸ்சும், லாரி உள்பட 3 வாகனங்களும் ஒன்றுடன் ஒன்றாக பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் நொறுங்கின. அங்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X