என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு
Byமாலை மலர்24 Jan 2021 10:03 PM GMT (Updated: 24 Jan 2021 10:03 PM GMT)
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி கடந்த 18-ந் தேதி பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் நிஷாந்த் சர்மா, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 1, 21-ந் தேதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் கடந்த 18 ஆண்டுகளிலேயே அதிகபட்சமாக, கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 100 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அதில் 24 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி கடந்த 18-ந் தேதி பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது.
அதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் நிஷாந்த் சர்மா, உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த 1, 21-ந் தேதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் கடந்த 18 ஆண்டுகளிலேயே அதிகபட்சமாக, கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 100 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
அதில் 24 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 36 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 130-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X