என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்சி விரோத நடவடிக்கை - திரிணாமுல் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் எம்எல்ஏ
Byமாலை மலர்22 Jan 2021 7:43 PM GMT (Updated: 22 Jan 2021 7:43 PM GMT)
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பெண் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சட்டசபைக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
திரிணாமுல் காங்கிரசியில் பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வைஷாலி டால்மியா. பள்ளி தொகுதியின் எம்.எல்.ஏ.வான அவர், கட்சியின் தலைமைத்துவத்தில் உள்ளவர்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக வெளிப்படையாகவே பேசி வந்துள்ளார்.
கட்சியில் நேர்மை மற்றும் உண்மையாக இருப்பவர்களுக்கு இடம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து பெண் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஒழுங்கு குழு கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியதில், டால்மியாவை கட்சியில் இருந்து வெளியேற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததற்காக அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, மேற்கு வங்காள வனத்துறை மந்திரி ராஜீப் பானர்ஜி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த சில மணிநேரங்களில் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
ராஜீப் ராஜினாமா செய்த பின்னர், கட்சியின் தலைமைத்துவம் பற்றி விமர்சித்து டால்மியா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X