என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரபிரதேசத்தில் 5 வயது சிறுமி கற்பழிப்பு - வாலிபர் கைது
Byமாலை மலர்16 Jan 2021 11:59 PM GMT (Updated: 16 Jan 2021 11:59 PM GMT)
உத்தரபிரதேசத்தில் 5 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர்.
பண்டா:
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் கிர்வா போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம் 10 ரூபாய் தருவதாக கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு 23 வயது வாலிபர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று கேட்டபோது, வாலிபரும், அவரது குடும்பத்தினரும் இணைந்து சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக வாலிபரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த கற்பழிப்பு சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. எனவே அங்கு அசம்பாவித செயல்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தின் கிர்வா போலீஸ் நிலைய பகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 5 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியிடம் 10 ரூபாய் தருவதாக கூறி, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு 23 வயது வாலிபர் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மறைவான இடத்துக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று கேட்டபோது, வாலிபரும், அவரது குடும்பத்தினரும் இணைந்து சிறுமியின் குடும்பத்துக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக வாலிபரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த கற்பழிப்பு சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. எனவே அங்கு அசம்பாவித செயல்களை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X