என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்10 Jan 2021 1:11 PM GMT (Updated: 10 Jan 2021 1:11 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தன.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் 4 மாடிகளைகொண்ட அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளும், பிறக்கும் போதே குறைபாடு உள்ள குழந்தைகளும் சிகிச்சை பெறுவதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது.
இந்த வார்டில் 17 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் பிறந்து ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகள் ஆவர். அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தை குடும்பத்தினர் வீட்டிற்கு முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்றார். அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
மேலும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்மந்திரி உத்தவ் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் 4 மாடிகளைகொண்ட அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளும், பிறக்கும் போதே குறைபாடு உள்ள குழந்தைகளும் சிகிச்சை பெறுவதற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது.
இந்த வார்டில் 17 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் பிறந்து ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையிலான குழந்தைகள் ஆவர். அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வார்டில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் மூச்சுத்திணறி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகள் உயிரிழந்தன.
7 குழந்தைகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த ஒரு குழந்தை குடும்பத்தினர் வீட்டிற்கு முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று நேரில் சென்றார். அங்கு உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
மேலும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்மந்திரி உத்தவ் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X