என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பறவைக் காய்ச்சல் எதிரொலி- டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைப்பு
Byமாலை மலர்6 Jan 2021 5:29 AM GMT (Updated: 6 Jan 2021 5:51 AM GMT)
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், டெல்லியில் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த படாத பாடு பட்டு வரும் நிலையில், புதிய உயிர்க்கொல்லி நோய் கிளம்பியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. ஏராளமான பறவைகள் இறந்துள்ளன. இதனால் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி உள்ள நிலையில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாநில அதிகாரிகள் இந்த கண்காணிப்பு மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாநில அரசுகள், பறவைகள் இறப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை வாரம் ஒருமுறை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X