என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை- சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Byமாலை மலர்17 Dec 2020 2:32 AM GMT (Updated: 17 Dec 2020 2:32 AM GMT)
விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு போராட்டக்களம் அருகே சீக்கிய மதகுரு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சண்டிகர்:
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் 22–வது நாளை எட்டியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் அரியானாவின் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த சந்த் ராம் சிங் (வயது 65) என்ற சீக்கிய மதகுரு சிங்கு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு வந்தார். பின்னர் போராட்டக்களத்துக்கு அருகே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை’ என பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விவசாயிகளின் போராட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தற்கொலை தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். பிரதமர் மோடி தனது பிடிவாதத்தை விட வேண்டும் என அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் 22–வது நாளை எட்டியும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் அரியானாவின் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த சந்த் ராம் சிங் (வயது 65) என்ற சீக்கிய மதகுரு சிங்கு எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு வந்தார். பின்னர் போராட்டக்களத்துக்கு அருகே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘விவசாயிகளின் அவலத்தை தாங்க முடியவில்லை’ என பஞ்சாபி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விவசாயிகளின் போராட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தற்கொலை தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார். பிரதமர் மோடி தனது பிடிவாதத்தை விட வேண்டும் என அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X