என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்13 Dec 2020 3:15 PM GMT (Updated: 13 Dec 2020 3:15 PM GMT)
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அமைதியை குலைக்கும் வகையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இந்திய பாதுகாப்பு படையினர் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள துர்கன் போஷனா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை கைவிட்டு சரணடையும்படி பயங்கரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், பாதுகாப்பு படையினரின் கோரிக்கையை நிராகரித்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சண்டையின் இறுதியில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்த உள்ளூரை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டான்.
சுட்டுகொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களது பெயர் சஜீத் மற்றும் பிலால் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்பட பயங்கர ஆயுதங்களும், ஒரு சாட்டிலைட் போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட உள்ளூர் நபரிடம் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X