search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட டாக்டர்கள்
    X
    கைது செய்யப்பட்ட டாக்டர்கள்

    குஜராத் கொரோனா மருத்துவமனை தீ விபத்து - 3 டாக்டர்கள் கைது

    குஜராத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
    ராஜ்கோட்:

    குஜராத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள உதய் சிவானந்த் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    கடந்த 27-ம் தேதி இரவு அந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக 3 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×