என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் - டெல்லியில் இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்29 Nov 2020 12:58 AM GMT (Updated: 29 Nov 2020 12:58 AM GMT)
6 நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டம் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
புதுடெல்லி:
இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு.
இந்த நாட்டு தலைவர்களின் 19-வது கூட்டம், டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார். காணொலி காட்சி வழியாக நடைபெறுகிற இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள். பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொள்கிறார்.
ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்கிறார்கள். இதில் உறுப்பு நாடுகளின் வர்த்தக, பொருளாதார செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை கூட்டு பிரகடனத்துடன் இந்த கூட்டம் நிறைவு பெறுகிறது. கடந்த 10-ந்தேதிதான் இந்த அமைப்பின் உச்சிமாநாடு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றதும், இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பங்கேற்றதும் நினைவுகூரத்தக்கது.
இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு.
இந்த நாட்டு தலைவர்களின் 19-வது கூட்டம், டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்குகிறார். காணொலி காட்சி வழியாக நடைபெறுகிற இந்த கூட்டத்தில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளின் பிரதமர் கலந்துகொள்கிறார்கள். பாகிஸ்தான் சார்பில் அதன் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் கலந்து கொள்கிறார்.
ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான், மங்கோலியா ஆகிய 4 நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்கிறார்கள். இதில் உறுப்பு நாடுகளின் வர்த்தக, பொருளாதார செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை கூட்டு பிரகடனத்துடன் இந்த கூட்டம் நிறைவு பெறுகிறது. கடந்த 10-ந்தேதிதான் இந்த அமைப்பின் உச்சிமாநாடு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றதும், இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பங்கேற்றதும் நினைவுகூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X