என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்24 Nov 2020 6:12 PM GMT (Updated: 24 Nov 2020 6:12 PM GMT)
தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை, சென்னையில் புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வட திசையில் கடலூருக்குக் தென்கிழக்கே 320 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 350 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
சென்னையில் இருந்து 410 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்தப் புயலானது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X