என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய பிரதேசத்தில் பசு அமைச்சரவை முதல் கூட்டம்... பசுக்களை பாதுகாக்க வியூகம்
Byமாலை மலர்22 Nov 2020 9:21 AM GMT (Updated: 22 Nov 2020 9:33 AM GMT)
மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள தனி அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சகத்தில், 5 அமைச்சர்கள், 6 துறைகள் இடம்பெற்றுள்ளன.
கோபாஷ்டமி தினமான நவம்பர் 22ம் தேதி, பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார். அதன்படி இன்று பசு அமைச்சரவையின் முதல் கூட்டத்தை காணொளி வாயிலாக முதல்வர் நடத்தினார்.
இதில் பசு அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பசு பராமரிப்பு வல்லுநர்கள் பங்கேற்றனர். அப்போது பசு பாதுகாப்பு குறித்த விரிவான திட்டங்களை வகுத்து பணிகளை தொடங்கும்படி முதல்வர் அறிவுறுத்தினார். பசு பாதுகாப்பு நல வரி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் பேசிய அவர், ‘விலங்குகள் தொடர்பான துறைகளின் அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலாளர் இணைந்து குழுவை உருவாக்கி பசு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக பணியாற்றுவார்கள். இந்த விவகாரத்தை கால்நடை வளர்ப்பு துறையால் மட்டுமே கையாள முடியாது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X