search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    பெங்களூரு-சென்னை சதாப்தி ரெயில்கள் ரத்து: தென்மேற்கு ரெயில்வே தகவல்

    பயணிகள் வருகை குறைந்ததால் பெங்களூரு-சென்னை சதாப்தி ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தீபாவளி, சாத், துர்கா பூஜை பண்டிகைகளையொட்டி பெங்களூரு-சென்னை இடையே இருமார்க்கமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(வண்டி எண்:-02027/02028) இயக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ரெயில்களுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. பயணிகள் வருகையும் குறைவாக உள்ளது.

    இதனால் 21-ந் தேதி (அதாவது இன்று) முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை பெங்களூரு-சென்னை இடையே இயங்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×